துரித காதல் புரிதல் தராது ... !!!
புரிந்த காதல் துரிதலில் வராது ... !!!!
இதைப் புரிந்த மனம் காதலில் விழாது ... காதலில் எழும் !!!!
புரிந்த காதல் துரிதலில் வராது ... !!!!
இதைப் புரிந்த மனம் காதலில் விழாது ... காதலில் எழும் !!!!
என்னவளை மனதில் நிறுத்தி ஏதேதோ எழுத முற்பட்டேன்; ஆனால், ஒரு வரிக்கு மிகுந்து என்னால் ஏதும் எழுத இயலவில்லை ! அந்த ஒரு வரியும் ஒரு சொல்லில் அடங்கி நிற்க ... அச்சொல்லையும் கீற மனமில்லாமல் எழுதுகோல் என் கையை நீங்கியது ... சிந்தையில் நின்ற அச்சொல் வேறொன்றுமில்லை ... என்னவளின் "பெயர்" தான் !! என் வறண்ட மனதிற்கு மழைக்காலம் காட்டியவளே ... ! என் இருண்ட வாழ்விற்கு வர்ணம் பூசியவளே ... !! என் பாலைமனம் படர்ந்த மலர்க்கொடியே ... ! என் நெஞ்சக்கிளை சேர்ந்த "மழைக்கிளியே" ... !!!